அகநானூறு: 4
அகநானூறு: 4 களிற்றியானை நிரை முல்லை த் திணை ப் பாடல் - தோழி கூற்று தோழி தலைமகளைப் பருவங் காட்டி வற்புறுத்தியது. அவன் வரும் தேரிலுள்ள மணி ஒலிக்காமல் இருப்பதற்காக அதன் நாக்கை கட்டி வைத்துக்கொண்டு அவன் தேரில் வருகிறான். மணியின் ஒலி மலரில் தேன் உண்ணும் வண்டுகளைத் துன்புறுத்துமாம்.தலைவன் கருணை பூவுக்குள் உறங்கும் ஆண்-பெண் வண்டுகள் தேரின் மணியொலி கேட்டு அஞ்சாவண்ணம் தேர்மணியின் நாக்கைக் கட்டிவைத்துக்கொண்டுள்ள தேரில் அவன் (தலைவன்) வருகிறான், என்கிறாள் தோழி, தலைவியிடம். முல்லை அரும்பு விட்டிருக்கிறது. இல்லம், கொன்றை ஆகிய மரங்கள் பூத்துக் குலுங்குகின்றன. முருக்கியிருக்கும் இரும்பு போன்ற முருக்குக் கொம்புகளை உடைய இரலைமான் துள்ளித்துள்ளி ஓடுகிறது. உலகம் புலம்புவதைக் கைவிட்டு மகிழ்ச்சியில் திளைக்கிறது. இப்படியெல்லாம் நிகழும்படி மேகத் தொகுதி பெருமழை பொழிந்து காடெல்லாம் கருமை நிறத்துடன் கவின் (அழகு) பெற்றுத் திகழ்கிறது. அவன் தேரில் வருகிறான். குரங்கின் தலைமயிர் போல நிமிர்ந்து வளைந்த பிடரி மயிருடன் கூடிய குதிரை பூட்டிய வண்டியில் வருகிறான். அவன் தேரில் வருகிறான். குரங்கின் தலைமயிர்...