குறுந்தொகை: 188
குறுந்தொகை: 188
முல்லைத்திணைப் பாடல் - தலைவி கூற்று
மதுரை
அளக்கர் ஞாழர் மகனார் மள்ளனார்.
தலைவன் கூறிச் சென்ற
கார்ப்பருவம் வந்ததைக் கண்ட தலைவி,“கார்காலம் வந்துவிட்டது, இன்னும் தலைவர் வந்திலர்!”
என, தோழிக்குக் கூறி வருந்தியது.
தோழி! முல்லைக்கொடிகளில் அரும்பு முதிர்ந்தன; தண்ணிய கார்காலத்தைஏற்ற அகன்ற முல்லை நிலங்கள் முல்லை மலர்களோடுஅழகு முதிர்ந்தன; எனதுமாட்சிமைப் பட்ட அழகைக் கெடுத்தலை எண்ணி மாலைக் காலம் வந்தது; என்னைப் பிரிந்து என் தூய ஆபரணங்களைநெகிழச் செய்த தலைவர் இன்னும் வந்தாரல்லர். கார்காலம் வந்த பின்பும் தலைவர் வந்திலர்
கருத்துகள்
கருத்துரையிடுக