புறநானூறு - 182

 

முனைவர் ப.செல்வி,

இணைப்பேராசிரியர்,

தமிழ்த்துறை,

ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி,

கோவை – 641044


புறநானூறு - 182. பிறர்க்கென முயலுநர்!

 

பாடியவர்: கடலுள் மாய்ந்த இளம்பெரு வழுதி
திணை: பொதுவியல்
துறை: பொருண்மொழிக் காஞ்சி

உலகம் வாழ்கிறது எதனால் என்று தெரிந்துகொள்வோம். தனக்கென முயலாமல் பிறருக்கு உதவுதற்காக முயலும் மிகப்பெருந் தாளாண்மை உடையவர் உலகில் வாழ்வதால்தான். அவர்கள் இந்திர உலகத்து அமிழ்தமே கிடைத்தாலும் இனிதுஎன்று எண்ணி தான்மட்டும் உண்ணமாட்டார்கள். உலகில் எது நடந்தாலும் வெறுத்துச் சினம் கொள்ளமாட்டார்கள். பிறர் அஞ்சி ஒதுங்கும் நற்பணிகளைச் செய்யும்போது தயங்கமாட்டார்கள். புகழ் வரும் என்றால் அதனைப் பெறத் தன் உயிரையும் கொடுப்பர். பழி வரும் என்றால் உலகையே சேர்த்துக் கொடுத்தாலும் வாங்கிக்கொள்ள மாட்டார்கள். அயராமல் உழைத்துக்கொண்டே இருப்பர். இத்தகையர் வாழ்வதால்தான் உலகம் இயங்கிக்கொண்டிருக்கிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இலக்கியத்தில் பெண்கள்

மணிமேகலை பீடிகை கண்டு பிறப்புணர்ந்த காதை

இயற்கைக்குத் திரும்புவோம்